அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இன்று வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு காப்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 14 May 2024

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இன்று வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு காப்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது

 


அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்  இன்று வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு காப்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது  


மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான குன்றத்து முருகனுக்கு  வைகாசி விசாகத் திருவிழா வைகாசி மாதம் நடைபெறுது வழக்கம் இதனைத் தொடர்ந்து நேற்று மாலை உற்சவ சன்னதியில் உற்சவர் சுப்பிரமணியசுவாமி தெய்வானை மரிக்கொழுந்து அலங்காரத்தில் எழுந்துருவினர் அதன்பின்பு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது அதன் இன்று சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானை அம்மனுக்கும் காப்பு கட்டும்  நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சுவாமி உற்சவர் சன்னதியில் இருந்து புறப்பாடாகி லட்சுமி தீர்த்தம் அருகே உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்துருகினார் அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பின்பு மீண்டும் சுவாமி உற்சவ சன்னதியை அடைந்தது இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக  வருகின்ற தேதி 22 ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழாவும் 23ஆம் தேதி மொட்டை யரசு திருவிழா  நடைபெறும் 11 நாள் திருவிழா நடைபெறும்  இவ்விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் ஸ்தானீகபட்டர்கள்  கோயில் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad