திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் பங்குனி திருவிழா நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஆலோசனை கூட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday 21 March 2024

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் பங்குனி திருவிழா நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்.


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் பங்குனி திருவிழா நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஆலோசனை தொடர்பாக திருக்கோவில் தேவசேனா திருமண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் துணை ஆணையர் சுரேஷ் ,திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் சாந்தி மற்றும் மதுரை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் குருசாமி மற்றும் மண்டலம் 5 ல் தலைவர் சுவிதா விமல் ஆய்வாளர்கள் ராஜேஸ்வரி, முருகன்,போக்கு வரத்து காவல் ஆய்வாளர் செந்தாமரை கண்ணன்,மற்றும் கோவில் அர்ச்சர்கள் பணியாளர்கள் தீயணைப்பு அலுவலர்கள்,சுதா வட்டார சுகாதார அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


திருக்கோவிலில் நடைபெறும் கை பாரா நிகழ்ச்சி சூரசம்கார நிகழ்ச்சி திருக்கல்யாணம் திருத்தேர் போன்றவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது மேலும் மின் கம்பங்களில் திருவிழாக்காலங்களில் தடைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad