முப்பெரும் விழா மேடையில் உதயநிதியை மேடையில் உட்கார வைத்து கீழே மூத்த அமைச்சர்கள் உட்கார வைக்கப்பட்டது திமுகவின் சுயமரியாதை சமதர்மம் எங்கே போனது? - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 18 September 2024

முப்பெரும் விழா மேடையில் உதயநிதியை மேடையில் உட்கார வைத்து கீழே மூத்த அமைச்சர்கள் உட்கார வைக்கப்பட்டது திமுகவின் சுயமரியாதை சமதர்மம் எங்கே போனது?

 


முப்பெரும் விழா மேடையில் உதயநிதியை மேடையில் உட்கார வைத்து கீழே மூத்த அமைச்சர்கள் உட்கார வைக்கப்பட்டது திமுகவின் சுயமரியாதை சமதர்மம் எங்கே போனது?


திமுகவின் சுயமரியாதை காப்பாற்ற ஸ்டாலின் முன் வருவாரா?

75 வருடவரலாற்றில் அதிக முறை திமுக எதிர்க்கட்சியாக தான் இருந்தது

52 கால அதிமுக வரலாற்றில் 32 ஆண்டு காலம் ஆளும் கட்சியாக இருந்தது

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் பேச்சு

மதுரை

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள மறவப்பட்டியில் 10 லட்சம் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் கீழ் சுற்றுச்சுவர் அமைக்க பணி நடைபெற்றது ,இதனை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் பிரபு சங்கர், கண்ணன், ராமையா, மாநில எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் ஏகேபி .சுப்பிரமணியன், மாவட்ட அணி நிர்வாகிகள் மகேந்திர பாண்டி, சிவசக்தி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் மாரீஸ்வரி நாகலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்

ஆர் பி உதயகுமார் கூறியதாவது

சட்டமன்ற உறுப்பினர் நீதியின் கீழ் மக்களின் கோரிக்கை ஏற்ப திட்டங்களை வழங்கி வருகிறேன்.

திமுக தற்போது 75 ஆம் ஆண்டு முப்பெரும் விழாவை கொண்டாடியது, அதேபோல் புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவை எடப்பாடியார் கொண்டாடினார் அந்த விழா மக்களுக்கு பயனுள்ளதாக கொண்டாடப்பட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கி 52 ஆண்டுகளில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்துள்ளது, 69 சகவீத இட ஒதுக்கீட்டினை கொண்டு வந்து ஒன்பதாவது அட்டவணையில் ஏற்றி மகத்தான சாதனை படைத்தவர் அம்மா அவர்கள், அவரின் மறுவடிவமாக உள்ள எடப்பாடியார் எந்த மாநிலங்களில் இல்லாத வகையில் 7.5 சகவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்து அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கி இதனால் சமூக நீதி  காவலர் என்று மக்கள் கூறுகின்றனர்.

இந்த இயக்கம் ஆரம்பித்து 52 ஆண்டுகளில் 32 ஆண்டு காலம் ஆளும் கட்சியாக இருந்து மக்களுக்காக சாதனை திட்டங்களை கொடுத்தது, முக்கியமாக பெண்கள் உரிமையை நிலை நாட்டியது.

திமுக 75 ஆண்டு காலத்தில் மக்கள் நம்பிக்கை பெற்று ஆட்சி செய்து இல்லை அண்ணாவின் மறைவுக்கு பின்பு திமுக பலமுறை எதிர்க்கட்சியாக தான் இருந்தது. இந்த 75 ஆண்டுகளில் திமுக அதிக முறைஎதிர்க்கட்சியாகவும், சில முறை மட்டும் தான் ஆளுங்கட்சியாக இருந்தது.இதில் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்திய விட்டு அதன் மூலம் தான் திமுக ஆட்சிக்கு வந்தது கடந்த 1989 ஆண்டுகளில் இருந்தே அதிமுகவை குழப்பிவிட்டு தான் ஆட்சிக்கு  வந்தது  மக்கள் நம்பிக்கை பெற்று திமுக ஆட்சிக்கு வரவில்லை.

நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் கூட முதலமைச்சராக யார் வரவேண்டும் என்று மக்கள் வாக்களித்ததில் எடப்பாடியாருக்குதான் அதிக அளவில் வாக்குகள் விழுந்தன.

இன்றைக்கு இந்த இயக்கத்தை இழுத்துப் பழித்தும் சிலர் பேசுகின்றனர். தலைமைக் கழகம். இரட்டை இலை எங்குள்ளதோ அங்கு தான் உண்மையான தொண்டர்கள் இருப்பார்கள். இன்றைக்கு எடப்பாடியார்  தியாக வேள்வியில் இருந்து மக்களுக்காக உழைத்து வருகிறார். மக்களுக்காக உழைக்கும் கட்சிகளில் அதிமுகவை எந்த  கட்சியும் பிறக்கவில்லை. இனி பிறக்கப் போவதும் இல்லை.

இன்றைக்கு திராவிட முன்னேற்ற கழகம் மக்கள் விரோத சக்தியாக திகழ்ந்து வருகிறது. இன்றைக்கு சமூகநீதி ,மாநில சுயாட்சி, சமதர்மம், சுயமரியாதை என்று திமுக பவள விழாவில் பேசி வருகிறார்கள், ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் மேடையில் அமைந்திருக்கிறார் அவருடன் உதயநிதி அமர்ந்திருக்கிறார் மேலும் கனிமொழியும் அமர்ந்தனர் ஆனால் கீழே மூத்த அமைச்சர்கள்  அமைந்திருக்கிறார் ,இதன் மூலம் திமுகவின் சுயமரியாதை எங்கே போனது, மேடையில் இடமில்லையா? மு.க ஸ்டாலின் மனதில் இடம் இல்லையா?

இன்றைக்கு மக்களுக்காக இனம் வளர வேண்டும், மொழி வளர வேண்டும் என்று அதிமுக போராடி வருகிறது அதிமுகவில் எந்த பொறுப்புக்கும் எளிதாக வர முடியும். திமுகவில் அது போன்று வர முடியாது

கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் திராவிட இயக்கத்தை அண்ணா ஆரம்பித்தார் ,வாரிசு அரசியலை அவர் ஊக்குவிக்க வில்லை அவரது வளர்ப்பு மகள் பரிமளம் தெரியாமல் அரியாசனத்தில் அமர்ந்த போது அண்ணா அவரை மிகவும் கடிந்து கொண்டார் ஆனால் இன்றைக்கு திமுகவில் வாரிசு அரசியல் மேலோங்கி உள்ளது.

இன்றைக்கு மின்கட்டணம் உயர்ந்து விட்டது, சொத்த வரி உயர்ந்துவிட்டது, தற்போது மீண்டும் சொத்து வரி உயர போகிறது, சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது போதை பொருள் நடமாட்டத்தால் தமிழகமே தலை குனிந்து உள்ளது  ஆனால் இதை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆகவே இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 2026 தேர்தலில் எடப்பாடியாரை கோட்டைக்கும், ஸ்டாலினை வீட்டுக்கும் நீங்கள் அனுப்ப வேண்டும் என கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad