மதுரை மாவட்டம் பேரையூரில் 75கிலோ கஞ்சா பறிமுதல்.
மதுரை மாவட்டம் பேரையூரில் வெங்கடேசன்34 தந்தை பெயர் முத்துமாரி இவர் மங்கள்ரேவு கிராமத்தை சேர்ந்தவர்.இவர் கட்டட வேலை செய்து வருகிறார்.நேற்று வேலை முடிந்து வரும் வழியில் இன்ஸ்பெக்டர் துர்காதேவி, இளங்கோ தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்பொழுது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த வெங்கடேசனிடம் சோதனையிட்டனர் அவரிடம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இவர்மேல் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வீட்டையும் சோதனை செய்தனர்.அப்பொழுது 75கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது.உடனடியாக பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதை சிறப்பாக செய்த போலீசார்களை மதுரை மாவட்ட எஸ்.பி. B.K.அரவிந்த் பாராட்டி யுள்ளார்.
No comments:
Post a Comment