திருமங்கலத்தில் கொலை தெரு குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது,குழாய் சண்டை -தாய், மகன் கைது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 5 July 2024

திருமங்கலத்தில் கொலை தெரு குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது,குழாய் சண்டை -தாய், மகன் கைது.

 


திருமங்கலத்தில் கொலை தெரு குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது,குழாய் சண்டை -தாய், மகன் கைது.



திருமங்கலம் அருகே குழாய் சண்டையில் தொடங்கி முன்விரோதம் காரணமாக நடந்த தகராறில் கத்தியால் குத்தி கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மேலும் இறந்தவரின் சகோதரர் பலத்த காயத்துடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் பாண்டிச்செல்வி தம்பதியினர் இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கண்ணன் கட்டிடத் தொழிலாளியாக இருந்தார் இந்நிலையில் கண்ணன் குடும்பத்திற்கும் எதிர் வீட்டில் வசித்து வந்த சரத்குமார் குடும்பத்திற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு நடந்துள்ளது அப்போது தொடங்கி அவ்வப்போது இரு குடும்பத்தினருக்கும் சிறு சிறு பிரச்சனை ஏற்பட்டு வாய் தகராறு கைகலப்பு என இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இருவரும் பிரச்சினையும் அவ்வப்போது கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு சென்று போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. காவல் நிலையம் சென்றாலும் தொடர்ந்து அவ்வப்போது தகராறு நடப்பது தொடர்ந்து உள்ளது இந்த நிலையில் நேற்று மாலை கண்ணன் பணி முடித்து வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது எதிர் வீட்டில் வசித்து வரும் சரத்குமார் மற்றும் அவருடைய தாயார் லட்சுமி தகாத வார்த்தைகளால் கண்ணனை திட்டியதாக சொல்லப்படுகிறது இதனால் கோபம் அடைந்த கண்ணன் அவர்களோடு தகராறு ஈடுபட்டுள்ளார் இதை தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து சண்டையே நிறுத்தி உள்ளனர் இச்சம்பவம் தொடர்பாக கண்ணன் சகோதரர் சசிகுமார் கூடக்கோவில் காவல் நிலையத்தில் எதிர் வீட்டை சேர்ந்த சரத்குமார் குடும்பத்தினர் தங்களது குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு கம்பு கட்டையால் தாக்குவதாக புகார் அளித்துள்ளார்.  இந்நிலையில் இரவு 9 மணி அளவில் சரத்குமார் தாயார் லட்சுமி மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர் தகராறு முற்றிய நிலையில் இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர் இதில் ஆத்திரத்தில் சரத்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணன் மீது சரமாரியாக குத்தியுள்ளார் சம்பவத்தை கண்டு சண்டையை தடுக்க முற்பட்ட அவரது சகோதரர் சசிகுமார் மீதும் கத்தியால் குத்தி உள்ளனர் சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த கண்ணன் மயங்கி விழுந்தார். இதை கண்ட உறவினர்கள் உடனடியாக இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.இதில் கண்ணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் மேலும் பலத்த . காயமடைந்த சசிகுமாருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கண்ணன் மனைவி பாண்டி செல்வி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சரத்குமார் அவரது தாயார் லட்சுமி ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


குழாய் சண்டையில் தொடங்கிய முன்விரோதம் காரணமாக நடந்த தகராறு கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் கூடக்கோவில் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருமங்கலம் செய்தியாளர்
R. வினோத் பாபு

No comments:

Post a Comment

Post Top Ad