மாணவிக்கு அமைச்சர் பாராட்டு: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 14 May 2024

மாணவிக்கு அமைச்சர் பாராட்டு:

 


மாணவிக்கு அமைச்சர் பாராட்டு:


விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அ.முக்குளம் கஸ்தூரிபா பாலிகா வித்யாலயா உண்டு உறை விடப்பள்ளியில், அரசு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற   மாணவர் களுக்கு பாராட்டு குவிந்தது.     உண்டு உறைவிடப் பள்ளியில் 10ம் வகுப்பு  12ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கப் பட்டது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அ.முக்குளம் கிராமத்தில் கஸ்தூரிபா பாலிகா வித்யாலயா உண்டு உறை விடப்பள்ளி இயங்கி வருகிறது. 


இங்கு பள்ளி செல்ல முடியாமல் இடைநின்ற மாணவர்கள் பயின்று வருகின்றனர். நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வில் உண்டு. உ றைவிடப் பள்ளியில் பயின்ற மாணவிகள் நிஷாந்தி அபிஜனா, கிருத்திகா ஶ்ரீ காளீஸ்வரி நாகேஸ்வரி மலைச் செல்வி 12 ம் தேர்வில் ஸ்ரீமதி ஆகியோர் சிறந்த மதிப்பெண் பெற்றனர். தேர்வில்  சாதனை படைத்த மாணவிகளுக்கு ,சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் பெற்றோர்கள் பங்கேற் றனர்.


அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளை, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பாராட்டினார்.

No comments:

Post a Comment

Post Top Ad