மாநில அளவிலான கூடைப் பந்தாட்ட போட்டி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 26 May 2024

மாநில அளவிலான கூடைப் பந்தாட்ட போட்டி.

 


மாநில அளவிலான கூடைப் பந்தாட்ட போட்டி.


சோழவந்தானில் மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டி நடைபெற்றது. சென்னை அணி முதல் பரிசையும் வத்தலக்குண்டு அணி இரண்டாவது பரிசையும் பெற்றது.


மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசன் சண்முகனார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழக அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில், தமிழக அளவில் மதுரை திண்டுக்கல் கோவை திருப்பூர் விருதுநகர் கும்பகோணம் உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்றன. நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஜேப்பியார் சென்னை அணி முதல் பரிசையும், எங்ஸ்டார் வத்தலகுண்டு அணி இரண்டாவது பரிசையும் பெற்றது .


வெற்றி பெற்றவர்களுக்கு சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன், வெற்றி கோப்பையையும் சோழவந்தான் தொழிலதிபரும் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளரும் சோழவந்தான் அரிமா சங்கத் தலைவருமான டாக்டர் எம். வி. எம். மருதுபாண்டியன்  பரிசுகளையும் வழங்கினர் . நிகழ்ச்சியில், திமுக பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கொரியர் கணேசன், முள்ளிப்பள்ளம் ஜீவபாரதி வாடிப்பட்டி வட்டார காங்கிரஸ் தலைவர் முருகானந்தம், மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி மற்றும் சோழவந்தான் கூடை பந்தாட்ட கழக செயலாளர் சந்தோஷ், வழக்கறிஞர் அபிராமி மற்றும்  நிர்வாகிகள் தீர்த்தம் என்ற ராமன், பங்கார் ஹரி ,புகழேந்தி, கதிர் உதயா, அஜய் அருண், சண்முகம் மற்றும் எஸ். எம். பாண்டி சங்கங்கோட்டை சந்திரன், வணங்காமுடி, ஆனந்த், சசிகலா, சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். மூன்றாவது பரிசினை வடமதுரை அணி பெற்றது. நடுவராக, ராஜா ஜெகதீஷ் செயல்பட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad