சோழவந்தான் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியில் வ உ சி அறக்கட்டளை சார்பில் நீர் மோர் பந்தல்: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 24 April 2024

சோழவந்தான் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியில் வ உ சி அறக்கட்டளை சார்பில் நீர் மோர் பந்தல்:

 


சோழவந்தான் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியில் வ உ சி அறக்கட்டளை சார்பில் நீர் மோர் பந்தல்:


மதுரை மாவட்டம், சோழவந்தானில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஜெனக நாராயண பெருமாள் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து அழகரை தரிசித்து சென்றனர்.


இந்த நிலையில், பொதுமக்களில் தாகம் தீர்க்கும் வகையில் சோழவந்தான் வ உ சிதம்பரம் பிள்ளை அறக்கட்டளை சார்பில் வடக்கு ரதவீதி மேல ரத வீதி சந்திப்பில்  பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில், வ உ சிதம்பரம் பிள்ளை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad