திருமங்கலத்தில் அருள்மிகு செல்வ சக்தி விநாயகர் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 24 April 2024

திருமங்கலத்தில் அருள்மிகு செல்வ சக்தி விநாயகர் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

 


திருமங்கலத்தில் அருள்மிகு செல்வ சக்தி விநாயகர் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.



மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு பழமையான திருக்கோயில் அனுமார் கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது. அருள்மிகு செல்வ சக்தி விநாயகர் திருக்கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று மாலை 6 மணி முதல் மகா கணபதி ஹோமம் மற்றும் விக்னேஸ்வர பூஜை உடன் ஆரம்பிக்கப்பட்டு நேற்று அதிகாலை 5 மணி மேல் 6 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் மீனாட்சி சொக்கநாதர் ஆலய குருக்கள் கணபதி பட்டர் புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்தார் இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். மேலும் இத்திருக்கோவிலில் விநாயகரை தரிசனம் செய்த பிறகு அனுமாரை வணங்குவது ஆண்டு ஆண்டாக செய்து வருகின்றனர். விழாவின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இத்திரு கோவிலுக்கு அனைத்து ஏற்பாடுகளையும்               V. தங்கம் முன்னாள் ராணுவத்தினர் சிறப்பாக செய்திருந்தார் மற்றும் திருக்கோயில்விழா கமிட்டினர்.

No comments:

Post a Comment

Post Top Ad