விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு தபால் வாக்கு பதிவு - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 15 April 2024

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு தபால் வாக்கு பதிவு


விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு  தபால் வாக்கு பதிவு மன்னர் கல்லூரியில் நடைபெற்றது.



விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் வருவாய்த்துறை, அரசு அலுவலர்கள், மற்றும் காவல்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கான தபால் வாக்குப்பதிவு பசுமலையில் உள்ள மன்னர் கல்லூரியில் நடைபெற்றது.


தபால் வாக்குப்பதிவிற்கான வாக்கு சீட்டு வழங்கப்பட்டு அவற்றை வாக்களிக்க மறைமுக வாக்கு சாவடி அமைக்கப்பட்டது அதில் வாக்களித்த பின் அருகில் உள்ள சீல் வைக்கப்பட்ட வாக்கு பெட்டியில் தங்கள் வாக்கு களை செலுத்தினர்.


மன்னர் கல்லூரி வாக்குப்பதிவு மையத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தனி அறையில் அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.மேலும் வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பதிவு செய்யப்பட்டு அவை அனைத்தும் ஒருங்கிணைத்து விருந்து கொண்டி செல்லப்படும் போது தபால் வாக்கு பெட்டியும் விருதுநகர் மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு
கொண்டு செல்லப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad