சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் பகுதிகளில் அதிமுகவினர் தீவிரவாக்கு சேகரிப்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday 4 April 2024

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் பகுதிகளில் அதிமுகவினர் தீவிரவாக்கு சேகரிப்பு.


தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு வாக்குகள் கேட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனையின் பேரில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் கொரியர் கணேசன் அறிவுறுத்தலில், மன்னாடிமங்கலம் தெற்கு வடக்கு மற்றும் கல்லாங்காடு ஆதிதிராவிடர் காலனி ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று அதிமுகவினர் வாக்குகள் சேகரித்தனர்.

இதில்,கிளைச்செயலாளர்கள் மகளிர் அணியினர் அதிமுகவின் பிற அணி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறுவர்கள் ஆவலாக அதிமுகவும் வாக்கு சேகரித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad