திருமங்கலம் அருகே ஆதரவற்ற முதியோர்களுக்கு தொடர்ந்து மூன்று மாதமாக அன்னதானம் வழங்கும் சமூக ஆர்வலர்கள். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 10 February 2024

திருமங்கலம் அருகே ஆதரவற்ற முதியோர்களுக்கு தொடர்ந்து மூன்று மாதமாக அன்னதானம் வழங்கும் சமூக ஆர்வலர்கள்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பால்பாண்டி, ராஜசேகர், விக்கி, வரதராஜன், விவேக், நாகராஜன், மற்றும் அப்பகுதி சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கடந்த மூன்று மாதமாக தினந்தோறும் ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார்கள் இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் இந்த இளைஞர்களே பாராட்டி வருகின்றார்கள். மேலும் இதனை கண்ட பொதுமக்கள் அனைவரும் தங்களது பகுதிக்கும் இது போன்ற சமூக ஆர்வலர்கள் வரவேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள் 

No comments:

Post a Comment

Post Top Ad