மதுரை மாநகராட்சி பொது மக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 14 February 2024

மதுரை மாநகராட்சி பொது மக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்.


மதுரை மாநகராட்சி நிர்வாகம் வாரந்தோறும் ஒவ்வொரு மண்டலத்திலும் பொது மக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெறும், இன்று தெற்கு மண்டலம் 4ல் நடந்தது இதில் 88. வார்டில் சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி மின்சார விளக்கு அமைத்து கொடுத்த தெற்கு மண்டலத் தலைவர் முகேஷ் சர்மாவுக்கு, ஏ.ஜி.எம். குடியிருப்போர் பொது நலச்சங்கம் சார்பாக, தலைவர் அனுப்பானடி பாண்டியராஜன், சால்வை அணிவித்து நன்றி தெரிவதித்தார். 

இதில்,  சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த குறை தீர் முகாமிற்கு, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமை வகித்து, பொதுமக்களின் மனுக்களை பெற்று கொண்டார், இதில், தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், துணை ஆணையாளர் சரவணன், தயாநீதி மண்டல ஆணையாளர் ஷாஜகான் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள். பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad