மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், நாகமலை புதுக்கோட்டை- விளாச்சேரி வழியாக நிலையூர் - கம்பிக்குடி கால்வாய்க்கு நீர் நிலையூர் கண்மாய் பகுதி வழியாக வருகிறது.

இந்நிலையில், விளாச்சேரிக்கு கால்வாய்க்கு வரும் தண்ணீர் வடிவேல் கரை கிராமம் அருகே உள்ள மதகு உடைப்பு ஏற்பட்டு இடையில் தம்பிக்குடி கால்வாய் க்கு செல்லும் நீர் முழுவதும் வடிவேல் க்கரை கிராமத்திற்குள் சென்றது, இதனால், வடிவேல் கரை கிராமத்தில் வயல்வெளிகள் மற்றும் வீடுகளில் வெள்ளத்தில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வடிவேல் கரை மதகை சரி செய்யும் பணியை செய்து வருகின்றனர். மதகு உடைந்து திடீரென புகுந்த வெள்ள நீரால் வடிவேல் கரை பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
No comments:
Post a Comment