58-ம் பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஐயப்பன் எம்எல்ஏ தலைமையில் உசிலம்பட்டியில் நடந்தது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 22 November 2023

58-ம் பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஐயப்பன் எம்எல்ஏ தலைமையில் உசிலம்பட்டியில் நடந்தது.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகே முன்னாள் முதல்வர் அதிமுக ஓபிஎஸ் அணியினர் 58 கிராம வாசனை கால்வாயில் தண்ணீரை திறந்து விடாமல் அலட்சியப்படுத்தும் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் மாவட்ட அவை தலைவர் வேலுச்சாமி இளைஞர் அணி மாநில தலைவர் ராஜ்மோகன் கிழக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் மாவட்ட நிர்வாகிகள் கார்த்திகைசாமி மாவட்ட பொருளாளர் மு.சி.சோ. ரவி,திருமங்கலம் நகர செயலாளர் ராஜாமணி மற்றும் கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad