”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 22 November 2023

”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டார்.


மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், வீரபாண்டி ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், (22.11.2023)  மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் பணிகளை பார்வையிட்டார்.

தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்இ ”மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரடியாக அரசு சேவை என்ற நோக்கில் சோதனை முன்னோட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், நடத்தப்படும் முகாமில் பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித்துறை / தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றிடும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.


மக்களுடன் முதல்வர் முகாமில், பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோர் கலந்து கொண்டு புதிய மின்இணைப்பு, மின் வீதப்பட்டியல் மாற்றம், பெயர்மாற்றம், மின்பளு மாற்றம், குடிநீர்-கழிவுநீர் இணைப்புகள், சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு-இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, பட்டா மாறுதல், உட்பிரிவு நிலஅளவை, இலவச வீட்டு மனைப்பட்டா, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்பட அரசு சார்ந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பெறப்படும் மனுக்கள் அரசு இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு ஒப்புகை வழங்கப்படுகிறது. இம்மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


அதன்படி,     மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், வீரபாண்டி ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் பணிகளை பார்வையிட்டார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,  கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், மதுரை வருவாய் கோட்டாட்சியர் ர.க.சாலினி, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வீரராகவன்  உட்பட  அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad