சோழன் உலக சாதனை புத்தகம் மற்றும் லீ சாம்பியன்ஷிப் இணைந்து நடத்திய யோகாசனம் திருமங்கலத்தில் முதல் முறையாக நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 29 October 2023

சோழன் உலக சாதனை புத்தகம் மற்றும் லீ சாம்பியன்ஷிப் இணைந்து நடத்திய யோகாசனம் திருமங்கலத்தில் முதல் முறையாக நடைபெற்றது.


மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சோழன் உலக சாதனை புத்தகம் மற்றும் லீ சாம்பியன்ஷிப் இணைந்து நடத்திய யோகாசனம் பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்முறையாக நமது உடல்நலத்தை மேம்படுத்தும் வகையில் நடந்தேறியது. 

இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு ஒரு ஆசனத்தில் இரண்டு நிமிடங்கள் என தொடர்ந்து 15 ஆசன நிலைகளில் நமது உடலை சமநிலையில் வைத்திருந்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் படித்தனர். இதில் வீரபத்ராசனம், சூரிய நமஸ்காரம், பாதஹஸ்தாசனம், உட்கட்டாசனம், திரிகோண ஆசனம், பச்சஇமஓதஆசனம், மச்சானம்,பாலாசனம், உஸ்த்ராசனம், யோகமுத்திராசனம், ஆகிய நிலைகளில் மாணவ, மாணவிகள் செய்தனர். 


முதல் முறையாக திருமங்கலத்தில் நடைப்பெற்றதால் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். கராத்தே மாஸ்டர் பால்பாண்டி இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் டி.எஸ்.பி வசந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தலைமை ஏற்று நடத்தியவர் L.பாஸ்கர்W.S.K.F.I தலைவர், முன்னிலை வகித்தவர் நிமலன் நீலமேகம் சோழன் உலக சாதனை புத்தகம், மற்றும் யோகா ஆசிரியர்கள் சாந்தி, காயத்திரி K.காயத்ரி, லோகவானி, விக்னேஸ்வரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad