மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த மழை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 29 October 2023

மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த மழை.


மதுரை மாவட்டத்தில், பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது, மதுரை அருகே திருமங்கலம், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், சமயநல்லூர், தேனூர், துவரிமான், அழகர்கோவில், திருப்பாலை, காஞ்சரம்பேட்டை, மேலூர், வரிச்சூர், கருப்பாயூரணி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

மதுரை நகரில் காலை முதலே மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. காலை முதலே வாணம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதிகாலை நேரங்களில் பணிப்பொழிவும் இருந்தது. மதுரை நகரில் பலத்த மழையால், அண்ணாநகர்,தாசில்தார் நகர், வண்டியூர், யாகப்பா நகர், மேலமடை, புதூர், பழங்காநத்தம், பழைய குயவர் பாளையம் பகுதிகளில் மழை நீரானது, சாலையிலே. குளம் போல தேங்கின. சாலைகள் மோசமான நிலையில் இருந்ததால், பொதுமக்களும், இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் கடும் அவதியடைந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad