இந்நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு_மணிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களை வாழ்த்தி பேசினார், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். தலைவர் கலைஞர் நூற்றாண்டையொட்டி நடைபெறும் பேச்சு போட்டி கட்டுரை போட்டி என்பதால் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் அவர்களை அழைத்து வந்த ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கி கௌரவபடுத்தினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இரா. பாண்டிமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் முல்லை மூவேந்திரன், மருது பாண்டியன், ஜெய்லானி, கண்ணன், செந்தமிழ் அரசி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள். ஒன்றிய நகர பகுதி பேரூர் மாணவரணியைச் சார்ந்த ஓடக்கரை, சரவணன், சிவப்பிரகாஷ், சந்தோஷ், முத்து குரு, ஆனந்த கிருஷ்ணன், அன்பழகன், விக்னேஷ், அருண், திவாகர், ரவி, முத்தரசன், சுந்தர்ராஜன், சூரிய பிரகாஷ், தவகிருஷ்ணன், செண்பகமூர்த்தி, பிரம்மா, சேதுபதி, கோடி லிங்கேஸ்வரன், பிரவீன், விஜய், போஸ், பாலாஜி, அயாஸ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
நிகழ்வில் தலைமை செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், நகரச் செயலாளர், பகுதி செயலாளர், பேரூர் செயலாளர்கள், அனைத்து அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கழகத்தினர் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி,கட்டுரைபோட்டி முதல் பரிசு 10000, இரண்டாம் பரிசு 7000, மூன்றாம் பரிசு 5000 12 மாணவர்களுக்கு தரப்பட்டது. மற்றும் கலந்து கொண்ட 500 மாணவர்களுக்கும் திருக்குறள் கலைஞர் எழுதிய உரை புத்தகமும், ரூபாய் 500, மரக்கன்று, சான்றிதழ்கள் அனைத்தும் மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன் வழங்கினார்.
No comments:
Post a Comment