தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று சொன்ன பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களுடைய நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் மதுரைக்கு வந்து மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக பசும்பொன் செல்ல உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, மதுரை வீரகனூர் சுற்றுச்சாலை பகுதியில், பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டம்.
இதற்காக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்தாகவும் அதிமுக காலகட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு அறிவிக்கக்கூடிய தங்க கவசத்தை நீதி அரசர்கள் தீர்ப்பின்படி இந்த ஆண்டு அதிமுகவின் பொருளாளர் முறைப்படி பெற்று அதன் வாரிசுதாரர்களிடம் ஒப்படைப்பார்.
ஒவ்வொரு ஆண்டும் மதுரை அண்ணா நகர் பகுதியில் இருக்கக்கூடிய வங்கியில் இருந்து பெற்று வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில், இந்த ஆண்டும் அதேபோன்று நடைபெறும் என்றார்.

No comments:
Post a Comment