மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் இணைந்து தாய் கல்வி குழுமம் சார்பாக முன்னாள் பேரூராட்சித் தலைவர் ராமச்சந்திர கென்னடி நினைவு தினத்தையொட்டி, இலவச கண் பரிசோதனை முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. இந்த முகாமிற்கு, நற்பணி மன்ற தலைவர் கராத்தே சிவா தலைமை தாங்கி தொடக்கி வைத்தார்.
த.மா.க வட்டாரத் தலைவர் பால சரவணன், ஜெ.சி.பி ரங்கசாமி, ரியாகார்த்திக் ஆகியோர் முன்னி லை வகித்தனர். செயலாளர் ஆட்டோ கண்ணன் வரவேற்றார். இந்த முகாமில், சங்கரா கண்மருத்துவமனை மருத்துவர் அனுராதா தலைமையில் செவிலியர் பாண்டிசெல்வி, முனீஸ்வரி, சத்யா, வினிதா ஆகியோர் 120 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்.
அதில், 40 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், ஒருங்கிணைப்பாளர் ஜெயகர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment