மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையைச் சேர்ந்தவர் அழகு வெள்ளைச்சாமி (வயது 60). இவர் ராஜபாளையம் பகுதி யில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் காவலாளி யாக பணியாற்றி வந்தார். இவரது குடும்பத்தினர் மதுரையில் வசித்து வருகின்றனர். இதனால் தனியாக வசித்து வந்த அழகு வெள்ளைச்சாமி இன்று காலை சிவரக்கோட்டை பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த மதுரை- செங்கோட்டை ரெயில் மோதியதில் அழகு வெள்ளைச்சாமி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அழகு வெள்ளைச்சாமி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment