பாம்பு கடித்து மாற்றுத்திறனாளி இறந்தார். பேரையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 27 July 2023

பாம்பு கடித்து மாற்றுத்திறனாளி இறந்தார். பேரையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருமங்கலம் அருகே பேரையூர் கொண்டுரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(வயது37), மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் வீட்டின் முன்பு உட்கார்ந்து இருந்தபோது ஒரு பாம்பு கடித்தது. உடனடியாக காலில் கட்டு போட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த பேரையூர் போலீசார் லட்சுமணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad