திருமங்கலம் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த வருடம் ஜூலை மாதம் முதற்கொண்டு வேளாண் விளைபொருட்களின் ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு மதுரை மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும் 671 விவசாயிகள் 26 வகையான வேளாண் விளை பொருட்கள் மூலமாக 1387 டன் எடையுள்ள வேளாண் விளை பொருள்களை ஏலத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று நல்ல விலைக்கு விற்று பயனடைந்துள்ளனர்.
அதே போல் கர்நாடகா மாநிலம் மற்றும் சென்னை, ஒசூர், திருச்சி, எட்டையபுரம், கடம்பூர், ராசிபுரம், சேலம், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், நாமக்கல், பொள்ளாச்சி, விருதுநகர், கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, பரமக்குடி, ராஜபாளையம், நாகர்கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள 131 வியாபாரிகள் தரமான பல்வேறு வேளாண் விளை பொருள்களை தங்களுக்கு கட்டுபடியாகக் கூடிய விலையில் வாங்கி பயனடைந்துள்ளனர். இந்தளவில் மறைமுக ஏலத்திற்கு அனைத்து தரப்பினரிடம் வரவேற்பு கிடைத்ததன் விளைவாக 6 கோடிக்கு ஏலம் நடத்தி புதிய சாதனை எட்டப்பட்டது.
மேலும் கடந்த 17 நாட்களில் மட்டும் ஒரு கோடிக்கு ஏலம் நடத்தி சாதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று (27/07/2023) தங்களாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இரு விவசாயிகளின் 21333 கிலோ மக்காச்சோளம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 23.50 க்கும், குறைந்தபட்சமாக 23 க்கும் விலை போனது. இதன்மூலம் ரூ 490688 க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 2500 கிலோ கம்பு ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 27.50 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 68750 க்கு வர்த்தகம் நடைபெற்றது.
மேலும் சோலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 26 கிலோ தேங்காய் கொப்பரை ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 72 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 1872 க்கு வர்த்தகம் நடைபெற்றது. இதன்மூலம் இன்று ஒரே நாளில் ரூ 561310 க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அவர்களை 9025152075 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment