தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு கபட நாடகம் நடத்தி ஆட்சியில் அமர்ந்திருக்கின்றனர். குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகை கிடைக்கவில்லை தாலிக்கு தங்கமும் தரவில்லை இதற்கு பெயரா திமுக அரசு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 25 June 2023

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு கபட நாடகம் நடத்தி ஆட்சியில் அமர்ந்திருக்கின்றனர். குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகை கிடைக்கவில்லை தாலிக்கு தங்கமும் தரவில்லை இதற்கு பெயரா திமுக அரசு.


மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான தங்கலாச்சேரியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் பி உதயகுமார் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் முன்னாள் முதல்வர் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த திமுக ஆட்சியில் கள்ளச்சாராயத்தினால் உயிர் பலி ஏற்பட்டு பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றது. 


மேலும் திமுக ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகள் சாதனை என்று பெருமையாக கூறி வருகின்றனர் இதில் அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகை கொடுக்கவில்லை தாலிக்கு தங்கமும் கொடுக்கவில்லை, நகை கடன் தள்ளுபடியும் சரிவர செயல்பாட்டில் இல்லை இப்படி பொய்மேல் பொய் ஆட்சி நடத்தி வரும் திமுக அரசு. இதற்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும். மேலும் இந்த உறுப்பினர் சேர்க்கை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இளைஞர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு அதிமுகவில் வருங்காலத்தில் இளைஞர்கள் துணையுடன் ஆட்சியில் அமர வேண்டும் என்று சிறப்பு உரையாற்றினார். 


இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன் கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், ஆண்டிச்சாமி வழக்கறிஞர் பிரிவு தமிழ்செல்வம், சுமதி சுவாமிநாதன், உச்சப்பட்டி செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad