தேன்கல்பட்டி கிராம பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட மயானம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செக்கானுாரணி- மெயின் ரோட்டில் உள்ளது. இப்பகுதியில் இறந்தவர்களை மயானத்தில் அவர்கள் வழக்கப்படி சாஸ்திர சம்பிர தாயங்கள் முறைப்படி அடக்கம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் இருக்கும் மயானத்தை மின் மயானமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மின் மயானமாக மாற்றினால் பாரம்பரிய முறைப்படி செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயங்கள் செய்யமுடியாத நிலை ஏற்படும்.


மேலும் மின் மயானம் அமைந்தால் நாளடைவில் எங்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் படிப்படியாக குறையும். பின்வரும் சந்ததிகளுக்கு இப்பகுதி மக்களின் பாரம் பரியத்தை பற்றி தெரியாமல்போகும் நிலை உள்ளது. ஆகவே இப்பகுதி மக்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து மின் மயானம் அமைவதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment