மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு உச்சநீதி மன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு தடை இல்லை என்று ஆதரவாக தீர்ப்பு கூறப்பட்டதை யொட்டி வாடிப்பட்டி பேரூர் தி.மு.க சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயலாளர் மு பால்பாண்டியன் தலைமை தாங்கி இனிப்பு வழங்கினார். இதில் பேரூர் அவைத்தலைவர் திரவியம், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்தி, கவுன்சிலர் ஜெயகாந்தன், வார்டு செயலாளர் ராம் மோகன், மருது, சக்திவேல், முரளி, அரவிந்த், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment