
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகு செட்டியார் ஊரணி இருந்து அருள்மிகு அன்னை பராசக்தி அம்மன் கோவில் வரை பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், காவடி, பறவைக் காவடி எடுத்தும் அம்பாளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று இரவு சங்கிலி கருப்ப சுவாமி பாப்பா ஊரணியிலிருந்து கரகம் சந்தன குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சங்கிலிக்கருப்பு சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று இரவு தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர் மேலும் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர் இன்று இரவு அதேபோல பாப்பா ஊரணியிலிருந்து அம்மன் உருவம் செய்து சப்பரம் ஊர்வலமாக வந்து கோவிலை சென்றடையும் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment