அருள்மிகு ஸ்ரீ சங்கிலி கருப்ப சுவாமி ஸ்ரீ பராசக்தி காளியம்மன் திருக்கோவில் பங்குனி திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அலகு குத்தி பறவைக் காவடி எடுத்து நேர்த்திக்கடன். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 7 April 2023

அருள்மிகு ஸ்ரீ சங்கிலி கருப்ப சுவாமி ஸ்ரீ பராசக்தி காளியம்மன் திருக்கோவில் பங்குனி திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அலகு குத்தி பறவைக் காவடி எடுத்து நேர்த்திக்கடன்.


திருமங்கலம் அருகே வில்லூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சங்கிலி கருப்பசாமி அன்னை ஸ்ரீ பராசக்தி காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழாவையொட்டி காப்புக்கட்டுதல் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இத்திருக்கோயிலுக்கு மதுரை விருதுநகர் மற்றும் வில்லூர் சுற்றுவட்டார 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். 


இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகு செட்டியார் ஊரணி இருந்து அருள்மிகு அன்னை பராசக்தி அம்மன் கோவில் வரை பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், காவடி, பறவைக் காவடி எடுத்தும் அம்பாளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று இரவு சங்கிலி கருப்ப சுவாமி பாப்பா ஊரணியிலிருந்து கரகம் சந்தன குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சங்கிலிக்கருப்பு சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து இன்று இரவு தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர் மேலும் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்  இன்று இரவு அதேபோல பாப்பா ஊரணியிலிருந்து அம்மன் உருவம் செய்து சப்பரம் ஊர்வலமாக வந்து கோவிலை சென்றடையும் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad