சாலையில் சல்லி கற்களை கொண்டு செல்லும் கொடுஞ்செயல், வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 20 April 2023

சாலையில் சல்லி கற்களை கொண்டு செல்லும் கொடுஞ்செயல், வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.


மதுரை அருகே, கூத்தியார்குண்டு நான்கு வழிச்சாலையில், சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி, பலமுறை சல்லி கற்களை, இதுபோன்று நடு ரோட்டில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால், வாகன விபத்து ஏற்பட நேரிடும் என, ஆஸ்டின்பட்டி காவல் துறையினரால் பலமுறை அறிவுறுத்தப்பட்டும், சிமெண்ட் கலவை தயாரிக்கும் நிறுவனம் ஒருபோதும் செவி சாய்க்கவில்லையாம்.

சாலையில் கற்களை கொண்டு செல்லும்போது, சல்லி கற்கள் சிந்துவதால், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், சாலையில் சறுக்கி நிலைதடுமாறும் நிலை ஏற்படுமாம். எனவே, இதற்கு காவல்துறையினர் அந்த நிறுவனத்தின் வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


மதுரை புறநகர் பகுதிகளில், பல ஊர்களில் லாரிகளில் தென்னை மட்டை, குவாரிகளிலிருந்து ஜல்லிக் கற்கள், ஜல்லி தூசிகள், மண்கள்  ஆகியவற்றை லாரிகள் மீது தார்பாய் மூடாமல் கொண்டு செல்லப்படுவதால், லாரிகள் பின்னால் எந்த வாகனங்கள் தொடரமுடியாமல் தூசி  பரபதுடன், சாலையில் கற்கள் சிந்தி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாம்.


ஆகவே, மதுரை நகர், புறநகர் மாவட்ட காவல்துறை அலுவலர்கள், லாரிகளில் தார்பாய் இன்றி,செங்கல், மணல், கற்கள் கொண்டு செல்லும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad