மதுரையில் நடந்த குற்ற சம்பவங்கள். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 9 October 2022

மதுரையில் நடந்த குற்ற சம்பவங்கள்.

மதுரையில் கத்தி முனையில் வழிப்பறி நான்கு பேர் கைது.

 

மதுரையில்  மணியில்  வெவ்வேறு சம்பவங்களில் வழிப்பறி செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர், மேலமடை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கருப்பாயூரணி சீமான் நகரில் வேலை செய்து கொண்டு இருந்தபோது யாகப்பா நகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சபரி ராஜ் என்பவர் அவரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்தார். இந்த சம்பவம் குறித்து சக்திவேல் மாட்டுத்தாவனி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பணம் பறிக்க முயன்ற சபரிராஜை கைது செய்தனர் .


ஆணையர் கணபதி நகரை சேர்ந்தவர் உதயகுமார் 60. இவர் கூடல் நகர் அலங்காநல்லூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை ஆணையூர் மூத்துநகரைச் சேர்ந்த மச்சக்காளை மகன் அருண்குமார் என்ற கருவாயன் 21 என்பவர் கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 500 ஐ வழிப்பறி செய்துவிட்டார் .இந்த சம்பவம் குறித்து உதயகுமார் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் அருண்குமாரை கைது செய்தனர் .


ஆரப்பாளையம் பொன்னகரம் ஆறாவது தெருவை சேர்ந்தவர் மனோகரன் 48 .இவர் ஆரப்பாளையம் டி.டி. ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த மஞ்சள் மேட்டு காலனியைச் சேர்ந்த மணிமாறன் மகன்  27 என்ற வாலிபர் வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 500ஐ வழிப்பறி செய்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து  கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறி செய்த மதனை கைது செய்தனர்.


பொன்னகரம் சுடுதண்ணி வாய்க்காலை சேர்ந்தவர் பாண்டி 40. இவர் ஆறுமுகம் சந்து சந்திப்பு ஒர்க்ஷாப் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .அவரை பேச்சியம்மன் படித்துறையைச் சேர்ந்த முருகன் என்ற தக்காளி முருகன் 31 என்பவர் வழிமறித்து அவரிடம் இருந்து ரூபாய் 650ஐ வழிப்பறி செய்துவிட்டார். இது குறித்து பாண்டி புகாரில் திலகர்திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.


மதுரையில் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேர் கைது.


மேலூர் பர்மா காலனி நொண்டி கோவில் பட்டியைச் சேர்ந்தவர் மகேந்திரன் மகன் இளவரசன் 36 .,ஒத்தக்கடை நரசிங்கம் பெருமாள் கோவிலை சேர்ந்தவர் திருக்குமார் 46.இவர்கள் மேலவெளி வீதியில் லாட்ஜ் ஒன்றின் முன்பாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை திடீர்நகர் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.


செல்லூர் தியாகி பாலு இரண்டாவது தெருவை சேர்ந்தவர்  பீமன் மகன் விக்னேஷ் 26.இவர்அந்த பகுதியில் கஞ்சா விற்பணை செய்தபோது  செல்லூர் போலீசார் அவரை கைது செய்து  அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல்செய்தனர்.


மதுரையில் பத்திரப்பதிவில் மோசடி செய்த சார்பதிவாளர் மீது நடவடிக்கை கலெக்டரிடம் ரஜினிமன்ற பிரமுகர் மனு மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியை சேர்ந்தவர் பால நமச்சிவாயன். ரஜினி மன்ற பிரமுகரான இவர் மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.


அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது- நான் மதுரை பகுதியில் ரியல் எஸ்டேட்  தொழில் செய்து வருகிறேன். மதுரை இலந்தைகுளம் கிராமம்  வளர் நகர் பகுதியில் எனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள 37 சென்ட் இடத்தை கள்ளிக்குடியை சேர்ந்த சரவணன், அவரது மனைவி கலைவாணி,சீனிவாசன், ஜெகன் குமார், கார்த்திக் ஆகியோர் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு போலீஸ்நிலையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது.


இந்த நிலையில் சட்டவிரோதமாக மீண்டும் பத்திரப்பதிவு செய்து நீதிமன்றத்தை அவமதிப்பதுடன், சட்டத்திற்கு புறம்பாக மேற்படி நபர்கள் போலி ஆவணங்களை வைத்து பல்வேறு நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்து  மோசடி செய்து வருகின்றனர். இதற்கு மதுரை வடக்கு சார் பதிவாளர் உடந்தையாக செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன் மோசடியாக செய்யப்பட்ட பத்திரப்பதிவையும் உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மதுரையில் வணிக வளர்ச்சி கருத்தரங்கம்; வியாபாரிகள் பங்கேற்பு.


மதுரை அவனியாபுரத்தில் வணிக வளர்ச்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கம் மதுரை நுகர்வோர் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பாக நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கத்தில் தலைவர் குற்றாலிங்கம் தலைமை தாங்கினார் செயலாளர் மோகன் வரவேற்புரை ஆற்றினார் கருத்தரங்கம் குறித்து வணிக வளர்ச்சி குறித்து  பயிற்சியாளர் பி. ஜி .ராஜன் விளக்கவுரை அளித்தார்.


இதில் பொருளாளர் இளங்கோவன் துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்பட நிர்வாகிகள் வியாபாரிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கத்தில் கொரோனா காலத்தில் பின்னடைந்த வியாபாரங்களை எப்படி மீட்டு எடுப்பது என்பது குறித்தும் வியாபாரத்தில் புதிய யுக்தளை புகுத்தி  எப்படி வளர்ச்சி பெற செய்வது என்பது குறித்துவிளக்கமும்  வியாபாரிகளின் சந்தேகங்களுக்கு பதிலும் அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad