கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார மதுரை,சிவகாசி நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார், அப்பொழுது வரலாறு காணாத கூட்டத்தைக் கண்டு ஆளுங்கட்சியில் அதிர்வு ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக நிர்வாக குளறுபடிகளையும், மதுரையில் திமுக அமைச்சர் நடத்திய ஆடம்பர திருமணத்தைப் பற்றி பேசினார்,
ஆனால் அதற்கு அமைச்சர் மூர்த்தி அரசியல் நாகரீகம் இல்லாமல் தரம் தாழ்ந்தி பேசுவது அவர் பதவிக்கு அழகு அல்ல, 4ம் தர மனிதரைப் போல நீ,போ,வா என்று அமைச்சர் பேசி உள்ளார்,
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாருக்கு, பேசுவதற்கு தார்மீக கடமை உண்டு,நீங்கள் நடத்திய ஆடம்பர திருமணத்தை நாட்டு மக்கள் நன்றாக தெரியும், உலை வாயை மூடலாம், ஆனால் ஊர் வாயை மூட முடியாது,நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டீர்கள் மூன்று கோடி என்று.
மக்களுக்கு திட்டங்கள் என்றால் நிதிநிலை பற்றாக்குறை என்று கூறப்படுகிறது, அம்மா உணவகத்திற்கு நிதி பற்றாக்குறை கூறப்படுகிறது, மடிக்கணினி தாலிக்கு தங்கம் திட்டம் கேட்டால் நிதி பற்றாகுறை என்று கூறப்படுகிறது, ஆனால் தற்போது ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது, மதுரையில் எந்த அமைச்சர் குடும்பத்தில் இதுபோன்ற ஆடம்பரத்தில் திருமணம் நடக்கவில்லை ,இதில் எடப்பாடியார் பேசுவதில் எந்த தவறும் இல்லை.
அமைச்சர் மூர்த்தி பழையதை நினைத்துப் பார்க்க வேண்டும், எங்க ஆட்சியில் கனிமவளத் துறை வணிகவரித்துறையில் நடைபெற்ற புள்ளி விவரங்கள் குறித்து உங்களுடன் விவாதிக்க நான் தயார் கடந்த ஒன்னறை ஆண்டு காலம் நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்த சேவையை விவாதிக்க தயாரா? கடந்த நான்கு ஆண்டுகாலத்தில் எடப்பாடியார் அனைவரையும் அரவணைத்து சென்றார், எடப்பாடியாரிடம் உதவி கேட்காதவர்கள் யாரும் கிடையாது, அமைச்சர் மூர்த்தி பதவி மோகத்தில் பேசுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,அப்படி எடப்பாடியார் கூறியது தவறு என்றால் நீங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடலாமே ,உங்களுக்கே தயக்கம் ஏன்?
ஆனால் 4ம்தர மனிதரைப் போல் அமைச்சர் பேசக்கூடாது, நாங்கள் எதற்கும் பின்வாங்க போகவில்லை, ஆடம்பர திருமணம் என்பது ஊரே அறிந்த விஷயம், எதிர்க்கட்சி தலைவருக்கு யாரும் எழுதி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை,உங்கள் தலைவரை போல் குறிப்பு எழுதி பேசுபவர் அல்ல குறிப்பு இல்லாமல் 5 மணி நேரம் கூட எடப்பாடியார் பேசுவார், அமைச்சர் மூர்த்தி கனிம வளத்தை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன சேவை ஆற்றினீர்கள் என்பது எங்களுக்கு தெரியும், ஒருஅமைச்சரக்காக இருந்து கொண்டு, மக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்த திருமணம் நடந்தை பற்றி நியாயம் கேட்க எதிர்கட்சி தலைவருக்கு தார்மீக உரிமை உண்டு, அரசியல் நாகரீகம் கருதி இதுபோன்ற, அநாகரிகமான முறையில் பேசுவதை அமைச்சர் மூர்த்தி நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நீங்கள் பேசினால் உங்களை பற்றி வெட்ட வெளியில் பேச தயங்க மாட்டோம், அதற்காக நீங்கள் பழி வாங்கும் நடவடிக்கை கையில் எடுத்தாலும் அதற்கு அஞ்ச மாட்டோம்.
மதுரையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியாரை வைத்து 120 ஜோடி ஏழை,எளிய மக்களை தேர்வு செய்து திருமணத்தை நடத்தினோம், ஆனால் நீங்கள் முதலமைச்சர் அழைத்து உங்கள் வீட்டு திருமணத்தை நடத்தி உள்ளீர்கள், நாங்கள் நடத்தியது நாட்டு மக்கள் திருமணம் எங்கள் வீட்டுப்பிள்ளைகள் திருமணத்தை நடத்தவில்லை, ஆனால் நீங்கள் நடந்திபது உங்கள் வீட்டு மக்கள் திருமணம்.
ஜல்லிக்கட்டு விழாவை முதன் முதலில் ஒரு முதலமைச்சர் பச்சை கொடி அசைத்து துவக்கி வைத்தார் என்றால் அது எடப்பாடியாரை சாரும் ஏன் நீங்கள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது அப்போது முதலமைச்சரை அழைத்து வந்திருக்கலாமே, ,ஜல்லிக்கட்டு விழாவிற்கு சாப்பாடு போட்டோம் என்று கூறுகிறீர்கள், இதே கொரோனா காலத்தில் காலத்தில் முகம் தெரியாத நபர்களுக்கு நாங்கள் உணவு வழங்கினோம் என்று கூறினார்.
No comments:
Post a Comment