மதுரையில் தொடர் மழை வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் அவதி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 11 October 2022

மதுரையில் தொடர் மழை வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் அவதி.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்தை மழை பெய்து வருகிறது. இதனால் மதுரை அருகே உள்ள கருப்பாயூரணி மேலமடை தாசில்தார் நகர் பழங்காநத்தம் வண்டியூர் யாகப்பா நகர் மற்றும் கேகே நகர் பகுதிகளில் மழை நீரானது செல்ல வழி இல்லாமல் வீடுகளை சுற்றி வளைத்தது மதுரை கோமதிபுரம் ஜூபிலி டவுன் பகுதிகளில் சரியானபடி கால்வாய் வசதி இல்லாததால் சாலையில் தேங்கிய மழை நீரானது அங்குள்ள குடியிருப்புகளை சுற்றி வளைத்து வளைத்தது.


மேலும் வீடுகளுக்கும் மழை நீர் புகுந்து பலத்தை சேர்த்து ஏற்படுத்தியது மழைநீர் புகுந்ததால் ஜூபிடர் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இதேபோல மதுரை திருப்பாலை புதூர் பகுதிகளிலும் தெருக்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது மதுரை அண்ணா நகர் மருது பாண்டியர் தெருவில் மழைநீர் ஆனது தெருக்களில் குளம் போல தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் அவதியுற்றனர்.

மதுரை மாநகராட்சி நிர்வாகம் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad