திருமங்கலம் அருகே சிந்துபட்டி கிராமத்தில் மூதாட்டியை கழுத்து அறுத்து கொலை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 19 July 2024

திருமங்கலம் அருகே சிந்துபட்டி கிராமத்தில் மூதாட்டியை கழுத்து அறுத்து கொலை.

 


திருமங்கலம் அருகே சிந்துபட்டி கிராமத்தில்  மூதாட்டியை கழுத்து அறுத்து கொலை.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி கிராமத்தைச் சார்ந்த காசம்மாள் (70) வயது மூதாட்டியை அவரது மருமகள்சுதா அவருக்கும் பாக்கியராஜ் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதை கண்டித்த காசம்மாள் மாயோன் நகரில் வசித்து வந்தார் இந்நிலையில் கடந்த ஜுலை 8ம்தேதிஅன்று தனியாக இருந்த மூதாட்டியை  கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அவரிடம் உள்ள 54சவரன் நகையை கொள்ளையடித்து தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்து வந்த சிந்துபட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகளை காசம்மாள் கணவர்தங்கராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் டி. எஸ். பி அருள் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்து கைது செய்தனர். இதில் சுதா, பாக்கியராஜ் இருவரும் தகாத உறவு வைத்து இருந்தது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில் கேபிள் டிவி லைன் பராமரிப்புக்காக வந்த பாக்கியராஜுடன் சுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது இதை காசம்மாள் கண்டித்தார் ஆனாலும் தொடர்பு நீடித்ததால் சுதாவின் நடத்தை குறித்து அப்பகுதி மக்களிடம் காசம்மாள் சொல்ல ஆரம்பித்தார். இதை அவமானமாக கருதிய சுதா கள்ளக்காதலுடன் சேர்ந்து காச மாளைகொலை செய்தார். சம்பவம் நடந்த அன்றே குடும்ப உறுப்பினர்களின் அலைபேசிகளை ஆய்வு செய்தபோது சுதாவுடன் பாக்கியராஜ் அடிக்கடி பேசியது தெரிய வந்தது. இருவருக்கும் ஆன தொடர்பு குறித்து தெரிந்த சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போது இருவரும் அவமானம் தாங்காமல் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இவர்களது நோக்கம் காச மாளை கொலை செய்வது மட்டுமே போலீஸ் கவனத்தை திசை திருப்ப நகைகளை கொள்ளை அடித்து  குறிப்பிட்ட இடத்தில் பாக்கியராஜ் பாதுக்கினார் அதை மீட்டு உள்ளோம் என்றனர் போலீசார். இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வந்த போலீசார் களை தென்மண்டல ஜ ஜி பிரேம் ஆனந்த் சின்ஹா மாவட்ட எ. ஸ். பி. பாராட்டினர்.

திருமங்கலம்
செய்தியாளர்
R. வினோத் பாபு

No comments:

Post a Comment

Post Top Ad