இந்த கட்டிடத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம், திறந்து வைத்தார். அப்போது, பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறையில், பேரூராட்சி தலைவர் மு.பால்பாண் டியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, ஒன்றிய செயலாளர் பால. ராஜேந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். தலைமையாசிரியர் இனிக்கோ எட்வர்ட் ராஜா இனிப்பு வழங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் விஜய்ரங்கன் வரவேற்றார்.
இதில், கவுன்சிலர் ஜெயகாந்தன், பள்ளி வளர்ச்சி குழுத் தலைவர் வாசுகி, உறுப்பினர்கள் சசிகுமார், ராஜலட்சுமி, அங்காள ஈஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் உறுப்பினர்கள் ஜெயராஜ், சாந்தி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில், உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment