பொங்கல் உற்சவ விழா: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 7 June 2024

பொங்கல் உற்சவ விழா:

 


பொங்கல் உற்சவ விழா:


மதுரை மாவட்டம், பாலமேடு தேவேந்திர குல வேளாளர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வடக்கு வாசல் செல்லாயி அம்மன் திருக்கோவில், பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு, கிழக்குத் தெருவில் அமைந்துள்ள வலம்புரி ஶ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலில் உலக மக்கள் நன்மைக்காக வேண்டியும், விவசாயம் செழித்து பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.


இதில், இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad