வாடிப்பட்டி அருகே, பஸ் நிறுத்தத்தில் மயங்கி விழுந்தவர் சாவு : யார் அவர் போலீஸ் விசாரணை: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 3 June 2024

வாடிப்பட்டி அருகே, பஸ் நிறுத்தத்தில் மயங்கி விழுந்தவர் சாவு : யார் அவர் போலீஸ் விசாரணை:

 


வாடிப்பட்டி அருகே, பஸ் நிறுத்தத்தில் மயங்கி விழுந்தவர் சாவு : யார் அவர் போலீஸ் விசாரணை:



மதுரை, வாடிப்பட்டி அருகே பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தவர் அரசு மருத்துவமைனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மதுரை மாவட்டம், அய்யங்கோட்டை பஸ் நிறுத்தத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உட்கார்ந்து இருந்த ஒரு நபர் திடீரென்று மயங்கி விழுந்தார் .



உடனே, அந்த பகுதியில் இருந்தவர்கள் அய்யங்கோட்டை துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணிக்கு உயிரிழந்தார். அவர் யார் எந்த ஊர் என்று விவரம் தெரியவில்லை இது குறித்து, வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad