திருமங்கலம் தொகுதியில் உள்ள மேலக்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் சூழ்ந்த இடத்தினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயயகுமார் நேரில் ஆய்வு - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 21 May 2024

திருமங்கலம் தொகுதியில் உள்ள மேலக்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் சூழ்ந்த இடத்தினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயயகுமார் நேரில் ஆய்வு

 


திருமங்கலம் தொகுதியில் உள்ள மேலக்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் சூழ்ந்த இடத்தினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயயகுமார் நேரில் ஆய்வு



கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு,கள்ளிக்குடி வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் சின்னஉலகாணியில், ஒன்றிய கழகச் செயலாளர் ராமையா தலைமையில் அன்னதானம் நடைபெற்றது. இதற்கு அன்னமுத்து முன்னிலை வகித்தார்.


அன்னதானத்தினை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், மாவட்ட கழக அவை தலைவர் சி முருகன், மாவட்ட கழக பொருளாளர் வக்கீல் திருப்பதி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, கண்ணன், பிரபு சங்கர், மாவட்ட அணி நிர்வாகிகள் சரவண பாண்டி, சிவசக்தி, வக்கீல் துரைப்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், சேர்மன் லதா ஜெகன், சிவரகோட்டை ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து மேலக்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி இருந்ததை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தொலைபேசி தொடர்பு கொண்டு நீரை உடனடியாக அப்புறப்படுத்துமாறு கேட்டுக் கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர் பி.உதயகுமார் கூறியதாவது;


தற்போது பெய்து வரும் கனமழையால் திருமங்கலம் தொகுதியில் உள்ள மேலக்கோட்டை ரயில்வே சுரங்க பாதைத்தில் ஐந்து அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.இதனால் மக்கள் 3 கிலோ மீட்டர் அளவில் சுற்றி வருகின்றனர்.கடந்த அம்மா ஆட்சிக்காலத்தில் மழை நீர்த்தேங்கினால் உடனடியாக தண்ணீரை பம்பு மூலம் தேங்கிய நீரை  அப்புறப்படுத்துவோம். தற்போது அப்புறப்படுத்தப்படவில்லை இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தண்ணீரைக் வெளியேற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்


தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது ஆனால், அரசு தரப்பில் 2 கோடி மக்களுக்கு மெசேஜ் அனுப்பியதாக கூறப்பட்டு கூறப்படுகிறது ஆனால் இதுவரை எவ்வளவு பேருக்கு வந்தது என்று தெரியவில்லை?


தற்போது பேரிடர் காலத்தை, பேரிடர் முன்பு, பேரிடர் நடக்கும் பொழுது,பேரிடர் முடிந்தபின் என்று மூன்று கட்டங்களாக பிரித்து பார்த்து மீட்பு பணியில் செயல்பட வேண்டும்.


தற்போது திருமங்கலம் தொகுதியில் மின்சாரம் தாக்கி எட்டு ஆடுகள் இறந்துள்ளன. பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் விழும் நிலையில் உள்ளது இதை எல்லாம் முன்னெச்சரிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும்.


குற்றாலத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இந்த வெள்ள பெருக்கிற்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் அங்கு 16 வயது சிறுவன் வெள்ளத்தில் சிக்கி பலியாய் இருக்க மாட்டார். தற்போது கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்பதை தற்போது அங்கு குளிக்க தடை விதித்துள்ளது


இந்தியா விஞ்ஞான யுகத்தில் திகழ்ந்துவரும் நிலையில் தமிழகம் முன்னேற்றத்தில் பின்தங்கி தான் உள்ளது என கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad