வாடிப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் அனைத்து சமுதாயங்களையும் ஒருகிணைத்து வழிபாடு செய்யகோரி தாசில்தாரிடம் மனு - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 28 May 2024

வாடிப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் அனைத்து சமுதாயங்களையும் ஒருகிணைத்து வழிபாடு செய்யகோரி தாசில்தாரிடம் மனு

 


வாடிப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் அனைத்து சமுதாயங்களையும் ஒருகிணைத்து வழிபாடு செய்யகோரி தாசில்தாரிடம் மனு




மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டு நிரேத்தான்  கிராமத்தில் அமைந்துள்ள  ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும்  வைகாசி  திருவிழாவில் பல ஆண்டுகளாக அனைத்து சமூக மக்களும் ஒருகிணைந்து ஒற்றுமையோடு  திருவிழா வழிபாடு செய்து வந்த
நிலையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு கோவில் மரியாதை என்ற பெயரில் சாதிய சொல்லி அழைத்து  விபூதி கொடுத்து வருவதை ஒன்றுக்கு மேற்ட்ட மாற்று சமூதாய பிரிவினர்கள்  எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில் கிராம த்தில் உள்ள சமூதாயங்களுக்கிடையே மோதல் உருவாகும் சூழல் நிலைவியதால் கடந்த 17./5.2023 அன்று வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி தலைமையில் சமாதான கூட்டம் நடந்தபோது முடிவு எட்டப்படாததால் திருவிழா நடத்த தடை விதிக்கபப்பட்டநிலையில்  ஒரு பிரிவினர் திருவிழா நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் வழக்கு தொடர்ந்தனர்.


இந்நிலையில் துர்க்கையம்மன் கோவில் வைகாசி திருவிழா நடத்த வேலைகளை ஆரம்பித்து உள்ளதாக கூறி  மற்றொரு பிரிவை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50.க்கு மேற்பட்டோர் இன்று வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு நேரில்  சென்று தாசில்தார் மூர்த்திடம் மனு கொடுத்து முறையிட்டனர்.


மனுவில் எங்கள் ஊரில் ஏழு சமுதாய பொதுமக்கள் வசித்து வருகின்றனர் ..
ஊரில் உள்ள அருள்மிகு துர்க்கை அம்மன்  வைகாசி திருவிழாவில் ஒரு குறிப்பிட்ட பிரிவுனர் தங்கள் முதல் மரியாதை என்ற பெயரில் மற்ற சமுதாய மக்கள் மத்தியில் ஜாதி என்னத்தை விதைக்கிறார்கள்..



இதனால் துர்க்கை அம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் அனைத்து சமுதாய மக்களும் உரிமை செய்து  ஒற்றுமையோடு முதல் மரியாதை ஒன்று இல்லாமல் வைகாசி திருவிழாவை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்ட இருந்த நிலையில் தாசில்தார் இது சம்பந்தமான வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளதால் நீதிமன்ற முடிவுக்கு பின்னால் திருவிழா குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மனு அளித்தவர்களிடம். தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad