முத்து முருகா நிதி நிறுவன திறப்பு விழா: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 22 May 2024

முத்து முருகா நிதி நிறுவன திறப்பு விழா:


 முத்து முருகா நிதி நிறுவன திறப்பு விழா:


சோழவந்தானில், முத்து முருகா நிறுவனம் திறப்பு விழா பேரூராட்சி தலைவர் ஜெயராமன் மற்றும் முன்னாள் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.


மதுரை மாவட்டம், சோழவந்தான் பேருந்து நிலையத்தில், முத்து முருகா பண்ட் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் டாக்டர் எம் .மருது பாண்டியன் தலைமை தாங்கினார் . சங்கங்கோட்டை கிராம நல சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவா வரவேற்பு உரை ஆற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஆ. சந்திரசேகரன், சங்கங் கோட்டை கிராம நல சங்க செயலாளர் சேகரன் ,வட்டார காங்கிரஸ் தலைவர் ராமன் , சங்கங்கோட்டை கிராம சங்க பொருளாளர் சிந்தன் சக்தி, கம்ப்யூட்டர் சாந்தி கிருஷ்ணன், இந்தியன் நேவி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ் .கே. ஜெயராமன் கலந்து கொண்டார். அலுவலகத்தை, சோழவந்தான் முன்னாள் பேரூராட்சி தலைவர் எம் .கே. முருகேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் . வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியைச் சேர்ந்த  ஜோதி ராமலிங்கம், தொண்டு நிறுவன அமைப்பாளர் சிவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மீனா சிவக்குமார் நன்றி கூறினார். சிறப்பு அழைப்பாளர்களாக பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், கவுன்சிலர்கள் கௌதமராஜா, முத்து செல்வி, சதீஷ் ,அண்ணா முருகன் ,மோகன் ,சேகர், ஜோதிமணி,  நகர பிரமுகர் ஆதி பெருமாள், ஜவகர் நாராயணசாமி,  பத்திரிகையாளர் சின் ராஜா, சந்தை ரவி, வழக்கறிஞர்கள் மகேஷ், முரளிதரன் , பஷீர் அகமது ,  ராசி ஸ்டுடியோ, கண்ணன், நகர் காங்கிரஸ் தலைவர் முத்துப்பாண்டி,தேமுதிக தங்கராஜ், முத்துக்குமரன் நகை மாளிகை இருளப்பன், தக்காளி சுரேஷ், கேபிள் மணி அழகு என்ற அருண்குமார், தியாகு, காங்கிரஸ் சங்கரபாண்டி மற்றும் சோழவந்தானின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad