மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அருள்மிகு ஸ்ரீ அலமேலு மங்கை ஸ்ரீ ஸ்ரீ னிவாச பெருமாள் திருக்கோவில் ஏழாம் ஆண்டு திருக்கல்யாண மக உற்சவ விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் காமராஜபுரம் வடபகுதியில் அலமேலு மங்காபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அலமேலு மங்கை உடனுறை ஸ்ரீ ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் ஏழாவது ஆண்டு அச்சாவதார ஜெயந்தி வர்ஷாபிஷேகம் மற்றும் சம்பிரதாய திருக்கல்யாண மகோ உற்சவ விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சீனிவாச பெருமாள் மற்றும் அலமேலு மங்கை சுவாமிகளை தரிசனம் செய்தனர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இந்த திருக்கல்யாண வைபவத்தை கண்டு களித்தனர்.இந்த திருக்கல்யாண வைபவ விழா முதல் நாள் காலை கணபதி ஹோமம், திவ்ய பிரபஞ்சம், திருமஞ்சனம், ஆகியவற்றுடன் ஆரம்பமாகி மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மறுநாள் காலையில் 7:30 மணி முதல் 9:00 மணிக்குள் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. விழாவின் முடிவில் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமானை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
No comments:
Post a Comment