முள்ளிப் பள்ளத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 24 May 2024

முள்ளிப் பள்ளத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி

 


முள்ளிப் பள்ளத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி 


 சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம்வடக்கு தெருவை சேர்ந்த ஆலடி வயது 65. இவர் இன்று காலைகடன் முடிப்பதற்காக முள்ளிப்பள்ளம் குருவித்துறை ரோட்டில் உள்ள தனியார் தோப்பில் சென்றுள்ளார்.எதிர்பாராத விதமாக அங்கு குறுக்கே சென்ற மின் வயர் தென்னை மரத்தில் உரசியதில் ஆலடிமீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து விட்டார். இது குறித்து முள்ளிப்பள்ளம்கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன், கிராம உதவியாளர் ராமமூர்த்தி ஆகியோர் காடுபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad