வாடிப்பட்டி அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.19 லட்சம் வழிப்பறி மர்மநபர்கள் துணிகரம் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 21 May 2024

வாடிப்பட்டி அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.19 லட்சம் வழிப்பறி மர்மநபர்கள் துணிகரம்

 


வாடிப்பட்டி அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.19 லட்சம் வழிப்பறி மர்மநபர்கள் துணிகரம்



மதுரை மாவட்டம்
வாடிப்பட்டி அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.19 லட்சம் பணம் செல்போன் வழிப்பறி செய்த  மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி வடக்கு காட்டூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் நிர்மல் கண்ணன் (வயது 31) அடகு தங்க நகைகளை மீட்டு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர்கள் சிவா, பிரபாகரன், ஜெயராஜ், வாசு மற்றும் சிலர் உடன் ஜெயராம் என்பவருக்கு பழக்கமான ஒரு நபர் திண்டுக்கல் லில் அடகு வைத்த நகைகள் சுமார் 300 பவுன் மூழ்கப் போவதாகவும் அதை பணம் கட்டி மீட்டு கிரையம் கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறிதிருச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு நேற்று
முன்தினம் காலை 2 காரில் வந்தனர். இதில் நகை வைத்துள்ள நபர் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் பகுதியில் இருப்பதாக கூறி ஜெயராமன், நிர்மல் கண்ணன், சிவா, பிரபாக ரன் ஆகியோர் ஒரு காரில் திண்டுக் கல்லில் இருந்து புறப்பட்டு வாடிப் பட்டிக்கு வந்தனர். மாலை 6.30 மணிக்கு பாண்டியராஜபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு நபர் பெருமாள்பட்டி ரயில்வே ரோடு அருகே  காரில் அழைத்துச் சென் றார். அப்போது அங்கு இருந்த 25 முதல் 30 வயது வரை மதிக்கத்தக்க ஆறு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி நிர்மல் கண்ணனிடம் இருந்து ரூ.13 லட்சத்தையும் செல் போனையும், சிவாவிடம் இருந்து ரூ.6 லட்சத்தை யும், செல்போனை யும், பிரபாகரன் இருந்து ஒரு செல்போனும் பறித்துக் கொண்டு சென்றனர்.இதுகுறித்து நிர்மல் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad