தனிச்சியம் பகவதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் தனிச்சியம் அருள்மிகு பகவதியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை யொட்டி, இக்கோயில் முன்பாக யாக சாலை மண்டபத்தில் அனுக்ஞை, விக்னேச பூஜை, புண்ணியாவாசனம், கலச பூஜைகள், மகா வேள்விகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மகா பூர்ணாவதி, பிரசாதம் வழங்குதல், போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாம் காலம் பூஜைகளும், நாடி சந்தானம் ,யாத்ரா தானம் போன்ற பூஜைகள் நடைபெற்றது. காலை யாகசாலை பூஜை, சுகாசினி பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, குடங்கள் புறப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை அடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, பகவதி அம்மன் கோவில் பங்காளிகள், கோயில் நிர்வாகிகள் விழா கமிட்டியின் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment