திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளுக்கான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பு பொதுக்கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் பெரியசாமி, பெரியகருப்பன், மெய்யநாதன், பழனிவேல் தியாகராசன், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, தமிழரசி, பூமிநாதன், மேயர் இந்திராணி சட்டமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.
இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின்: பாரதப் பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் சொன்ன வாக்குகளை நிறைவேற்றவில்லை நாங்கள் மக்கள் மக்களிடம் அடுத்த வாக்குறுதியை படிப்படியாக நிறுத்தி நிறைவேற்றி வருகிறோம் மோடி ஒவ்வொரு கணக்கிலும் 15 லட்சம் படம் போடுவோம் என்றால் ஆனால் அந்த திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை மதுரையில் எய்ம்ஸ் திட்டமானது, கானல் நீராக உள்ளது.
பாஜக அரசு மக்கள் விரோத அரசாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு உதவ முன் வரவில்லை என்றார்.பிரதமர் மோடி எதிர் கட்சிகள் ஆளுகின்ற மாநிலத்தில், முதலமைச்சர் களை பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறார்.
No comments:
Post a Comment