காரியாபட்டி யில் சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா கொடியேற்றத் துடன் தொடங்கியது:
காரியாபட்டியில் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி என்.ஜி.ஓ. நகர் சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா கொடி ஏற்றத்துடன். தொடங்கியது. வரும் 29ஆம் தேதி வரை நடைபெறும் பொங்கல் விழாவில், தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கம், பூஜைகள் நடை பெறும். விழாவில், வரும் 26 ஆம் தேதி வெள்ளிக் கிழமை மாலை திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது .வரும் 29ஆம் தேதி அதிகாலை பொங்கல் வைபவம் மற்றும் மாலை 5 மணிக்கு முளைப்பாரி கங்கையில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில், அன்னதானம், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழு செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment