மதுரையில், ஆஞ்சநேயர் கும்பாபிஷேகம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 25 March 2024

மதுரையில், ஆஞ்சநேயர் கும்பாபிஷேகம்.


மதுரை மஹால் 5-வது தெருவில் உள்ள ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேய தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சீதாராமஆஞ்சநேயர் திருக்கோவில் ஜீர்ணாதாரண அஷ்டபந்தன மகா ஸ்ம்ப் ரோஷன கும்பாபிஷேகம்  கோ பூஜை சுமங்கலி பூஜை விமான கலச ஸ்தூபி ஸ்காபிதம்மகா சுதர்சன ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளோடு முதல் நாள் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ரவிச்சந்திரன் ஐயங்கார், ரங்கநாதன் ஐயங்கார், சன்னதி தலைமை அர்ச்சகர் வெங்கடேஷ் ஐயங்கார் உள்ளிட்ட ஐயங்கார்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரானது கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சீதாராமா ஆஞ்சநேய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாரதணைகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ராமா ராமா கோஷம் வழங்க பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, தலைவர் கருணாகரன், உப தலைவர் மனோகரன் பொருளாளர் ஜீவன் பாபு கௌரவ காரியதரிசி விஜய் பாபு உட்பட சபை நிர்வாகஸ்தர்கள் நிர்வாக குழு உறுப்பினர்கள் திருப்பணி குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad