சோழவந்தான் பேரூராட்சியில், நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமினை, பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பேரூராட்சித் துணைத் தலைவர் லதா கண்ணன், பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின், செயல் அலுவலர், துப்புரவு ஆய்வாளர் பேரூர் செயலாளர், வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், சுகாதார பணியாளர்கள் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலைய ராஜ்குமார், சுகாதார மேற்பார்வையாளர் அலுவலர் முத்துராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், இனியகுமார் சதீஷ், விமல், உதவியாளர் கண்ணன், மற்றும் கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment