தமிழகம் முழுவதும் இன்று 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக போலியோ சொட்டு மருந்து முதற்கட்ட முகாம் திருமங்கலத்தில் உள்ள 27 வார்டுகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த முகாமில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் தொடங்கி வைத்து 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
இதை தொடர்ந்து திருமங்கலம் பேருந்து நிலையம் ரெயில் நிலையம் பொதுமக்கள் அதிகம் நடமாடும் ஆகிய 31இடங்களில் முகாம் நடந்தது.இந்த முகாமில் துணை தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தார் நகராட்சி பொறியாளர் ரத்தினவேல், சுகாதார ஆய்வாளர்கள் சிக்கந்தர் அலுவலர்கள் கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment