இப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் பிராங்கிளின் நினைவாக பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தங்கப் பதக்கத்தை பேரூராட்சி தலைவர் ஜெயராமன் வழங்கினார். ஏ.என். ஆதிமூலம்பிள்ளை சரஸ்வதிஅம்மாள் நினைவாக பள்ளியின் இரண்டு மற்றும் மூன்றாவது மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வெள்ளிப் பதக்கத்தை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கவுன்சிலர் சத்திய பிரகாஷ் வழங்கினார். வட்டாரகல்வி அலுவலர்கள் ஷாஜகான் அகிலத்து இளவரசி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வி ஆகியோர் பரிசு வழங்கினார்கள்.
ராயபுரம் ஆர்.சி பள்ளி தலைமையாசிரியை பணிமாதா, சோழவந்தான் ஆர்.சி பள்ளி தலைமையாசிரியை சாந்திஅமலாஜோஸ்பின், பகல் நேர பாதுகாப்பு மைய ஆசிரியை தேவிகா, உதவி ஆசிரியைகள் பிரேம்குமாரி, கிருஷ்டி ஜெயஸ்டார், திவ்யா ஆகியோர் பேசினார்கள். மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. உதவி ஆசிரியை வனிதா சாந்தகுமாரி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment