மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த சாத்தங்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த ஶ்ரீ அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது. இத் திருக்கோயிலில், கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு, மாசி மாத முதல் பெட்டி எடுக்கும் திருவிழா நடைபெற்றது.
முன்னதாக, ஸ்ரீ அய்யனார் சாமி ஆபரணங்கள் கொண்ட பெட்டியை மலர்களால் அலங்கரிக்கப்பட்டும், சந்தனம், பன்னீர் போன்ற நறுமணங்களால் பூஜிக்கப்பட்ட பின்பு, கோயில் பூசாரிகளால் தலைச் சுமையாக , கிராம முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டு, திருக்கோயிலை அடைந்த பின்பு, அந்த பெட்டியை சாமியின் பீடம் அமைந்துள்ள இடத்தில் வைத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, திருமங்கலம், சாத்தங்குடி, கண்டு குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா காரணமாக சாத்தங்குடி கிராமமே களை கட்டியது.
No comments:
Post a Comment